states

ஒப்பந்த பணியாளர்கள் 36 ஆயிரம் பேரை நிரந்தரமாக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத பஞ்சாப் ஆளுநர்

சண்டிகர்,ஜன.2- பஞ்சாபில் பல்வேறு துறைகளில் பணி யாற்றி வரும் 36 ஆயிரம் ஒப்பந்தப் பணி யாளர்களை நிரந்தரமாக்கும் மசோதா வுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப் போவ தாக முதலமைச்சர் சரண்ஜித் சிங் தெரி வித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநி லங்களில், தங்களது சொல்படி கேட்கும் ஆளுநர்களை நியமித்து, மாநில அரசுகளுக்கு பல்வேறு இடைஞ்சல்களை மோடி அரசு கொடுத்து வருகின்றது என்று மாநில கட்சியினரும் அரசியல் நோக்கர் களும் விமர்சிக்கின்றனர்.  

இந்நிலையில் தற்போது பஞ்சாபில் ஒப்பந்தப் பணியாளர்கள் 36 ஆயிரம் பேரை நிரந்தரமாக்க பஞ்சாப் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை  ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இதனால் மசோதா சட்ட வடிவம் பெறு வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்காவிட்டால் அவருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தப் போவ தாக முதலமைச்சர் சரண்ஜித் சிங் எச்ச ரித்துள்ளார். பாஜகவின் அழுத்தம் காரணமாகவே இந்த மசோதாவுக்கு ஆளு நர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்றும்  குற்றம்சாட்டினார்.